ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட தடை – ஐசிசி அதிரடி

ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட தடை – ஐசிசி அதிரடி

வங்கதேச கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட ஒராண்டு தடை விதித்துள்ளது ஐசிசி.
கடந்த  2018- ஆம் ஆண்டு இலங்கை, ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு தொடரின் போதும், அதே ஆண்டு நடைபெற்ற  ஐபிஎல் போட்டியின் போதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வலியுறுத்தி தரகர்கள் சிலர் சகிப் அல் ஹசனை அணுகியுள்ளனர்.இவ்வாறு குற்றச்சாட்டு எழுந்த நிலையில்  விவகாரத்தை ஐசிசி விசாரணை செய்து வந்தது.
ஐசிசி விதிப்படி வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்றாலும் கூட, தரகர்கள் அணுகியதை  முறைப்படி தெரிவிக்க வேண்டும்.ஆனால் விதிமுறைகளை ஷாகிப்  அல் ஹசன் பின்பற்றவில்லை என்று  ஐசிசி தெரிவித்தது.
இந்தநிலையில் ஷாகிப் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் இரண்டு ஆண்டுகள்  விளையாட தடைவிதித்துள்ளது.

Join our channel google news Youtube