‘தமிழகம் மீட்போம்’ ! நவம்பர் 1 முதல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு

‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் கானொலி காட்சி வாயிலாக சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது.

இந்நிலையில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் கானொலி காட்சி வாயிலாக சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்டவாரியாக பங்கேற்கும் ‘தமிழகம் மீட்போம்!’ எனும் தலைப்பிலான, முதல்கட்ட 2021-சட்டமன்ற தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.