ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீகல்யான் அரசு முதுநிலை பட்ட பெண்கள் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த கல்லூரி மாணவ பேரவையை இந்திய மாணவர் சங்கம்(SFI) கைப்பற்றியது. ஆர்எஸ்எஸ்/பிஜேபியின்-ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பார்சித்(ABVP) பணத்தை தண்ணியா செலவழித்தும் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. அனைத்து இடங்களையும் எஸ்எப்ஐ கைப்பற்றியது.
அந்த பேரவையை துவங்கி வைப்பதற்காக சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் அழைக்கப்பட்டார். அவருடன் சிகார் விவசாயிகள் போராட்ட நாயகன் அமரா ராம் அவர்களும் கலந்து கொண்டார்.
பிருந்தா பேசும் போது ………..
“படிப்போம்&போராடுவோம்”-எனும் எஸ்எப்ஐ கோஷம் தற்போது அதிக முக்கியத்துவமும், பரிமாணமும் பெற்று விட்டது. அதை நடைமுறை படுத்த அனைத்து மாணவிகளையும் கேட்டு கொண்டார்.