கழிவறையில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை..! ட்விட்டர் குமுறிய சிறுவன் ..!

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரை சார்ந்த சிறுவன் ஒருவன் தனது ட்விட்டர் பக்கத்தில்தனக்கு நடந்த கொடூரத்தை பதிவிட்டுள்ளார் அதில் ,  நான் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு பொது கழிவறை உள்ளது. அதில் நான்  சென்றபோது அங்கிருந்த இரண்டு ஆண்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அந்தகழிவறையில்  இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. அங்கு நடந்த சம்பவத்தை மறக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன் ஆனால் அந்த சம்பவம் கண்ணெதிரே வந்து வந்து செல்கிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.

இது தொடர்பாக எனது  அப்பா, அம்மாவிடம் கூறலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள்  படிப்பறிவு இல்லாதவர் என்பதால் அவர்களை  வருத்தம் அடைய செய்ய வேண்டாம் என விட்டு விட்டேன். அதே நேரத்தில் எனது சொந்த ஊரிலே ஒரு ஆண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டது என கூறியுள்ளார்.

இவரது இந்த நிலைக்கு பல ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த மன நிலையில் இருந்து மீண்டு வர பலர் உதவ தயாராக இருப்பதாக சிறுவனின் ட்விட்டர் பதிவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
murugan