கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்பட்ட விவகாரத்தில் தீவிர விசாரணை…!!

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றபட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஊழியர்களிடம், ஐவர் குழுவினர் விசாரணை செய்தனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்திய ஊழியர்களிடம் விசாரணை நடத்த ஐவர் குழுவை தமிழக அரசு நியமித்தது. இதனைத்தொடர்ந்து ஊழியர்களான வளர்மதி, ரமேஷ், கணேஷ் மற்றும் ரத்த வங்கி பொறுப்பாளர் சைலேந்திரகுமார் ஆகியோரிடம் சிவகாசி அரசு மருத்துவமனையில் வைத்து, ஐவர் குழுவினர் விசாரணை நடத்தினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment