வாக்குப்பெட்டிககளில் வைக்கப்பட்டுள்ள 10 உறைகள் பிரிப்பு.! வேட்பாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்.!

வாக்குப்பெட்டிககளில் வைக்கப்பட்டுள்ள 10 உறைகள் பிரிப்பு.! வேட்பாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்.!

  • 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பெட்டிகள் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கொண்டுவரப்பட்டு அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
  • இன்று காலை முகவர்கள் சென்று பார்த்த போது, வாக்கு பெட்டிககளில்  வைக்கப்பட்டுள்ள 10 உறைகள் பிரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. நேற்று 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள், காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அறையில் பலத்த பாதுகாப்புடன் நேற்று இரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முகவர்கள் சென்று பார்த்த போது, வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 10 உறைகள் பிரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வாக்குப்பெட்டிகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், தங்கள் முன்பு உறைகளுக்கு வைக்கப்பட்ட சீல், தங்கள் முன்புதான் உடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube