மறைந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மூத்த தலைவர்கள்

மறைந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மூத்த தலைவர்கள்

டெல்லியில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள சுஷ்மாவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பலர் நேரில் சென்று சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங்,உள்துறை அமைச்சர் அமித் ஷா,மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ,பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Join our channel google news Youtube