போராடும் ஆசிரியர்கள்…!பதற்றமாகும் சென்னை..!முதல்வரை சந்திக்க செங்கோட்டையன் முடிவு..!

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர்களின் போராட்டத்தால் கல்லூரி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் குவிந்து வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் பதற்றமாகும் இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் தொலைபேசி மூலம் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
kavitha

Leave a Comment