சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல -நிதியமைச்சர்

சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல -நிதியமைச்சர்

சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். 4வது நாளாக நேற்றைய அறிவிப்பில், முக்கிய 8 அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்நிலையில், கனிமங்கள், ராணுவ பாதுகாப்பு தடவாள உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட 8 துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அப்போது பேசிய நிதியமைச்சர், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம் என்றும் ஜிஎஸ்டி போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் மோடி வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை என்றும் வளர்ந்துவரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என கூறினார். இதையடுத்து, சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதே கொள்கை என தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube