ராக்கி கயிறு கட்டிய மாணவிகளுடன் செல்பி எடுத்த ராணுவ வீரர்கள் !

நேற்று 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதை தொடர்ந்து நாடு முழுதும் சகோதரத்துவ சகோதரத்துவத்தை போற்றும் வகையில் நேற்று ரக்ஷா பந்தன் விழாவும்  கொண்டாடப்பட்டது.

இந்த விழாவையொட்டி பிரதமர் மோடிக்கு சிறுவர்கள் மற்றும்  பெரியவர்கள் என பலர் ராக்கி கட்டினர்.இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனோடு  ஒரு பகுதியில் உள்ள சிஆர்பி எஃப் வீரர்களுக்கு  ஏராளமான மாணவிகள் ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

இந்த ராக்கி கட்டும் நிகழ்ச்சியில் சிஆர்பி எஃப் வீரர்கள் கலந்துகொண்டு  ராக்கி கட்டிய மாணவிகளுடன் சிஆர்பி எஃப் வீரர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.

author avatar
murugan