பிரதமரின் பேச்சு தமிழர்களை உசுப்பேத்தும் செயலாக அமைந்துவிட கூடாது! சீமான் கருத்து!

பிரதமரின் பேச்சு தமிழர்களை உசுப்பேத்தும் செயலாக அமைந்துவிட கூடாது! சீமான் கருத்து!

பிரதமர் நரேந்திர மோடி, தான் அண்மைக்காலமாக பங்கேற்கும் சில பொதுமேடை பேச்சுக்களில், தமிழ் மொழியில் இருந்து திருக்குறள், தமிழ் கூற்று என தமிழ் மொழியை குறிப்பிட்டு பேசி வருகிறார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ் மொழிதான் பழைமையானது என பிரதமர் கூறியது, போல தமிழை ஆட்சிமொழியாகஅறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
தற்போது இதே கருத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தெரிவித்தார். அவர் கூறுகையில், பிரதமர் மோடி தமிழை பற்றி பேசுவது எனக்கு பெருமை. அதேபோல தமிழை ஆட்சிமொழியாக கொண்டு வந்தால் மட்டுமே தமிழ் வாழும். பிரதமரின் பேச்சு தமிழர்களை உசுப்பேத்துவிடுவதாக மட்டும் அமைந்துவிட கூடாது. என கருத்து தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube