தல, தளபதி ரசிகர்களிடம் சீமான் கேட்ட கேள்வியால் தலைகுனிவு..!

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சீமான் அவர்கள் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய சீமான் அவர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் பேசியுள்ளார்.

‘தற்போது இந்தி காரர்கள் தமிழக அரசு வேலையில் வேலை செய்யும் நிலைமை வந்துவிட்டது. ஆனால் நாம் இங்கு தலயா? தளபதியா? என்று சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம். இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் ஒருகாலத்தில் மண்டைய போட்டு போக வேண்டும்’ என்றார் சீமான்.

author avatar
Vidhusan