சென்னை நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை!

வருமானவரித்துறை அதிகாரிகள்  சென்னையில் உள்ள நகைக்கடையில் சோதனை நடத்தினர்.அசோக் ஜூவல்லர்ஸ் என்ற சூளைமேட்டில் உள்ள  நகைக்கடைக்கு சவுகார்பேட்டையிலும் கிளை உள்ளது.

இந்த நகைக்கடையின் உரிமையாளர் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரையடுத்து நேற்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சூளைமேட்டில் உள்ள கடையில் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment