வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்! மக்கள் அலறியடித்து ஓட்டம்!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை கிராமங்களான நீரோடி, சின்னத்துரை,  வள்ளவிளை அழிக்கல் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதுடன், மார்த்தாண்டம், கடியபட்டினம் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment