மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…!

மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலை உள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி,  கோட்டூர், முத்துப்பேட்டை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதேபோல் மன்னார்குடி, நீடாமங்கலம் ஒன்றியங்களில் பள்ளிகள் செயல்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Comment