தொடர் மழை எதிரொலி !புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை எதிரொலி !புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை  தொடங்கவுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக  மிதமான மழை பெய்து வருகிறது.நேற்றும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்திலும்  நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.இன்றும் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது,புதுக்கோட்டை  மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக  அறிவித்துள்ளார்.

Join our channel google news Youtube