சிதறிக்கிடந்த பணம் , நகை…வங்கி கொள்ளையின் மொத்த மதிப்பு வெளியீடு…..!!

திருச்சியில் சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது.வழக்கம்போல இன்று காலை வங்கியை திறக்க சென்றபோது வங்கி சுவரில் துளையிட்டு 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டதும்  ஊழியா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது.  கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை பயன்படுத்தி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.

இந்நிலையில்  திருச்சி சமயபுரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை போலீசால் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர்  உடைக்கப்பட்ட லாக்கர்களின் எண்கள் விவரம் தெரிவிக்கப்பட்டது. அதில்  114, 299, 300, 39, 323 ஆகிய லாக்கர்களில்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன நகைகள் மற்றும் கொள்ளை விவரங்களின் மொத்த மதிப்பு வெளியாகியுள்ளது.அதில் வங்கியில் காணாமல் போனதில் 520 சவரன் நகை மற்றும் 21 லட்சம் ரொக்கம் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 57 சவரன் மற்றும் 1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.போலீசார் கைப்பற்றிய பணம் மாற்றும் நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 1 கோடி 50 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. போலீஸ் கைப்பற்றிய 57 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை நடந்த வங்கி சாலையில் சிதறிக்கிடந்ததாக சொல்லப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment