நேர்கொண்ட பார்வை படத்தை பாதுகாக்க அஜித் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!

 அஜித் நடிப்பில் நாளை நேர்கொண்ட பார்வை படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இப்படத்தை இணையத்தில் வெளியிட தடை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்படம் பிரீமியர் காட்சி நேற்று திரைபிரபலங்களுக்கும், திரை விமர்சகர்களுக்கும்  படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதன் மூலம் சிலர் முக்கிய காட்சிகளையும், வசனங்களையும்  சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
இதனை கண்ட அஜித் ரசிகர்கள், அப்படி முக்கிய காட்சிகளை பற்றி யாரும் பதிவிடவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தெரிவித்தால்,
[email protected] , [email protected]  ஆகிய இணையதளத்தில் புகார் அளித்து விடுங்கள் என மேற்கண்ட இணையதள முகவரிகளை பதிவிட்டு வருகின்றனர். 
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.