சாத்தான்குளம் சம்பவம்: 3 நாட்களில் அறிக்கை தாக்கல்.. மனித உரிமை ஆணையம்.!

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜும், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், எஸ்பி குமார் தலைமையில் நெல்லை சென்ற மனித உரிமை ஆணையம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் செல்வமுருகன், சுதன், பிரசன்னா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்இருவரின் உடலில் இருந்த காயங்கள் குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி குமார், இது குறித்து கடந்த 3 நாள்களாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இதுவரை இந்த வழக்கில் 20 பேரிடம் விசாரணை நடத்திய இருப்பதாகவும், அடுத்த கட்டமாக மதுரை சிறையில் உள்ளவர்களிடம்  விசாரணை நடத்த உள்ளதாக கூறினார். இந்த விசாரணை தொடர்பான அறிக்கை 3 நாட்களுக்குள் சமர்பிக்கப்படும் என கூறினார்.

author avatar
murugan