அந்நிய செலவாணி வழக்கு! ஆஜராகாத சசிகலா! எதற்காக?

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக வெளிநாட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி உபகரணங்கள் வாங்கிய வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோரது மீது அமலாக்க துறையினர் 1996இல் வழக்கு தொடர்ந்தனர். சென்னை எழும்பூரில்உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா காணொளி மூலம் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆணை உரிய நேரத்தில் கிடைக்காததால் விசாரணையில் பங்கேற்க முடியவில்லை ஆதலால் இந்த வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment