தான் செய்த தவறுக்காக தன் மகளிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்!

  • தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் நல்ல நடிகையாக இருக்கிறார்.
  • வரலட்சுமி நடித்த முதல் படம் ரிலீசாக தாமதமான போது தான் எதுவும் உதவி செய்யவில்லை என சரத்குமார் வருத்தப்பட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முக்கிய நடிகராகவும் இருக்கிறார் சரத்குமார். தமிழக அரசியல் பிரபலமாகவும் இவர் வலம் வருகிறார். இவர் தனது மகள் வரலட்சுமி சரத்குமார் பற்றி பேசியுள்ளார்.

அதாவது, தன் மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்த முதல் படமான சிம்பு நாயகனாக நடித்த போடா போடி திரைப்படம் வெளியாக தாமதமானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் சமயத்தில் தான் எந்த உதவியும் செய்யவில்லை. எனவும் அதன் பிறகு வரலட்சுமி சரத்குமார் தனது நடிப்பால் தற்போது நல்ல நடிகையாக வலம் வருகிறார். எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார். முதல் படம் ரிலீசாவதற்கு உதவி செய்யாததால் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக சேசிங் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், கன்னி ராசியி எனும்  திரைப்படமும் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளன. சரத்குமார் தற்போது பிறந்தாள் பராசக்தி, மணிரத்னம் தயாரித்து வரும் வானம் கொட்டட்டும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாருடன் நடித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.