சோனியா காந்தியை சந்தித்த சரத்பவார் ! காரணத்தை கூறிய சரத்பவார்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் சந்தித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை.
மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதித்தோம்.170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சிவசேனா கூறியிருப்பது பற்றி தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.