குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை துவங்கிய சமந்தா! குவியும் பாராட்டுக்கள்!

  • குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை துவங்கிய சமந்தா.
  • சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள். 

நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னை நடிகையாக வலம் வருகிறார். இவர் 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவரை பொறுத்தவரையில், இவர் சினிமா துறையில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல், சமூக சேவை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனையடுத்து, சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் அந்த பள்ளி இயங்கி வருகிறது. சமந்தாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.