சல்யூட் கவின் ! கவின் குறித்து வனிதா வெளியிட்ட பதிவு !

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைகிறது.இந்த நிகழ்ச்சியின் இறுதி கடத்தி ஒவ்வொரு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள் .இந்நிலையில் கவின் நேற்றைய நிகழ்ச்சியில் 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறிவிட்டார்.

இது குறித்து லாஸ்லியா மற்றும் சாண்டி அதிர்ச்சி  அடைந்தார்கள்.கவின் செய்ததை குறித்து அவரது ரசிகர்கள்களுக்கும் மிகவும் வருத்தம்.இது குறித்து பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட நடிகை வனிதா முதல் முறை வெளியேற்ற பட்டு பின்பு வைல்ட் கார்ட் எண்ட்ரியாகவும் உள்ளே வந்தார்.

கவின் வெளியேறியது குறித்து அவருடைய ட்விட்டர் பகுதியில், “கவினுக்கு சல்யூட் அடிக்கிறேன். அவன் இந்த வாய்ப்பிற்காக காத்து கொண்டிருந்தான் என்றும் இதற்காக கவின் எந்த ஓரு ரூலையும் மீறவில்லை எனவும் டிராமா போடவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் அவர் கவின் ஆர்மி ” என்று கூறி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.