தனது பாதுகாவலரை 'பளார்' என அறைந்த சல்மான்கான்! கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்!

நடிகர் சல்மான்கான் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான பாரத் படம் நேற்று வெளியான நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆனா மும்பை தியேட்டர் ஒன்றுக்கு சல்மான்கான் சென்றிருந்தார்.
அங்கு நடந்த நிகழ்ச்சி பங்கேற்ற பின் வெளியில் வந்த சல்மான்கானை பார்ப்பதற்கு, அவரது ரசிகர்கள் பலரும் அவ்விடத்தில் கூடினர். அவரது ரசிகர்கள் சல்மான்கானுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதனையடுத்து, அவர் அருகில் ஓடி வர முயன்ற அவரது ரசிகரை, சல்மான்கானின் பாதுகாவலர் தடுத்துள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த சல்மான்கான் அவரது பாதுகாவலரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.