வார்டு உறுப்பினர் கடத்தப்பட்டாரா?! சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ரத்து!

வார்டு உறுப்பினர் கடத்தப்பட்டாரா?! சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ரத்து!

  • சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  • சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில், சேலம் மாவட்டடத்திலுள்ள தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட 1 வார்டில் சுயேட்சையாக வென்ற ஜானகி என்பவர் கடத்தப்பட்டதாக ஜானகி தரப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் கரணமாகத்தான் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேரடிவித்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube