ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் ராயல்டி தொகை கேட்டு சச்சின் வழக்கு !

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் ஒன்றின் மீது வழக்கு தொடுத்து உள்ளார்.தற்போது சச்சின் உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடும் போது வர்ணையாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இந்திய அணிக்கு சில நேரங்களில்  யோசனைகளும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் ஒன்றின் மீது வழக்கு தொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆஸ்திரேலியாவில் சிட்னியில்  உள்ள ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ்  நிறுவனத்திடம் சச்சின் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விளம்பரத்திற்காக ஒப்பந்தமானார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒப்பந்தத்தின் படி விளம்பரத்திற்கான தொகையை தரமறுத்து வருவதாகவும் சச்சின் கூறியுள்ளார்.அதனால் அந்த நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கும் தொடந்து உள்ளார். சச்சின் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

author avatar
murugan