உலககோப்பைக்கு செல்லும் தோனி,கோலிக்கு சச்சின் அட்வைஸ்

  • ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு எந்தவித ஓய்வும் கிடைக்காது.
  • விராத், தோனி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கூடுதலாக பொறுப்பில் இருந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முடித்துவிட்டு வீரர்கள் எந்தவித ஓய்வும் இன்றி ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் தொடரை முடித்த சில நாட்களிலேயே உலகக்கோப்பை தொடரும் துவங்க இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு எந்தவித ஓய்வும் கிடைக்காது.

இவ்வாறு தொடர்ந்து ஒரு போட்டிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பதால் வீரர்கள் ஒருகட்டத்தில் சோர்வடைய துவங்கி விடுவார்கள். ஆதலால் வீரர்களிடையே ஆரோக்கியமான மனநிலையை கொண்டுவருவது அவசியம்.
இவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் ஒரு அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “விராத், தோனி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கூடுதலாக பொறுப்பில் இருந்து வருகின்றனர். அவர்கள் இந்த உலக கோப்பையில் ஆரோக்கியமான மனநிலையில் ஈடுபட வேண்டும். ஐபிஎல் தொடரில் அவர்கள் வகிக்கும் கூடுதல் பொறுப்பினை சக வீரர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களையும் பழக்கப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
author avatar
Vignesh

Leave a Comment