சபரிமலை சர்ச்சை………அரசியலாக்காதீர்….கர்நாடக முதல்வர்….!!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி  தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, இந்த பிரச்சனையை அரசியலாக்க கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார்.இதனிடையே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்று அதனை அமல்படுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment