பாஜக தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன்! – எஸ்.வி.சேகர் அதிரடி பேட்டி!

  • பாஜக கட்சியை சேர்ந்த திரை பிரபலம் எஸ்.வி.சேகருக்கு நேற்று பிறந்த நாள்.
  • நேற்று திருக்கடையூரில் குடும்பத்தாருடன் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழக பாஜக கட்சியை சேர்ந்த சேர்ந்தவரும் திரைப்படப் பிரபலமான எஸ்.வி.சேகர் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள். அதனை கொண்டாடும் விதமாக திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பல அரசியல் கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, ‘ தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து திமுகவினர் தவறான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சட்டமானது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. எனவும், சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதற்கு தமிழகஅரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும்,

பிரதமர் மோடி திட்டங்கள் குறித்து தமிழக பாஜகவினர் தமிழகத்தில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டனர் எனவும், தான் தமிழக பாஜக புதிய தலைவராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். தமிழக பாஜக தலைவர் பட்டியல் பெயரில் தனது பெயரும் உள்ளது.’ எனவும் பல அதிரடியான கருத்துகளை நேற்று தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.