வரலாற்றில் இன்று(18.03.2020)…. அறிவியலாளர் ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்  பிறந்த தினம் இன்று…

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்  பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில்  மார்ச் மாதம்  18ஆம் நாள்  1858ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்கள் தியேடர் டீசல், எலிஸ் டீசல் ஆகியோர் ஆவர். இவர் சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த ஒரு அறிஞர் ஆவர். இவரது கண்டுபிடிப்பு இந்த தலைமுறைகளை புதிய அத்யாத்தை தொடங்கிவைத்தார்.இவர் டீசலில் இயங்கும் இயந்திர பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும் இவர் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதான எல்லியட் கிரெஸ்சான் பதக்கத்தை  1901ஆம் ஆண்டு பெற்றார். இந்த தலைமுறை தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்க தனது கண்டுபிடிப்பை அர்ப்பணித்த டீசல் செப்டம்பர் மாதம்  29ஆம் நாள்  1913ஆமாண்டு  தனது 55வது அகவையில் இந்த உலகை விட்டு மறைந்தார். இத்தகைய சிறந்த அறிஞர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று…

author avatar
Kaliraj