ஆர்.எஸ்.பாரதி முன் ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு.!

ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், ஆர.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ். பாரதி சரணடையும் தினத்தில் ஜாமீன் மனுவை பரிசீலிக்க முதன்மை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்