ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – 2 பேர் கைது…!!

ஈரோட்டில் வடமாநில பிரமுகரின் நிறுவனத்தில் இருந்து ஹவாலா பணம் 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு சத்தி சாலையில் பிரேம்நாத் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத 20 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஈரோடு மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

டெல்லியில் உள்ள பிரமுகர் ஒருவருக்கு இந்த பணத்தை அனுப்ப இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்நாத் மற்றும் ஊழியர் பாலாஜி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment