மாவோயிஸ்டுகளை பற்றி தகவல் அளித்தால் ரூ.2 லட்சம் பரிசு: தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு…!!

மாவோயிஸ்ட் குறித்த தகவல் தந்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு என தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள காராச்சிக்கொரை வனசோதனை சாவடி, காவல்துறை சோதனைச்சாவடி மற்றும் பவானிசாகர் காவல்நிலையத்தில் இது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் தேசிய புலனாய்வு முகமையால் ஒட்டப்பட்டுள்ளது. தக்சின கன்னடா பகுதியை சேர்ந்த சுந்தரி, ஆரோலி கிராமத்தை சேர்ந்த மாரப்பா ஆகியோருக்கு தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதால், மேற்படி நபர்களை கைது செய்ய உரிய தகவல் தருபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment