“ரூபாய் 1,00,00,00,00,00,00 கல்வித்துறைக்கு ஒதுக்கீடு” பிரதமர் அறிவிப்பு ..!!

டில்லியில் கல்வி தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கல்வியும் அறிவும் புத்தகங்களுடன் மட்டும் நின்று விடாது. மனிதர்களின் அனைத்து பரிணாமங்களிலும் வளர்ச்சி பெற செய்வதே கல்வியின் நோக்கம். இது புது கண்டுபிடிப்புகள் இல்லாமல் சாத்தியம் இல்லை.

நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. கல்வியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, கல்வி துறையில் புத்தாக்க முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதன் மூலம் கல்வி துறையில் 2022ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சம் கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். உயர்கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்காக, உயர்கல்வி நிதி அமைப்பையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தேசிய உயர் கல்வி பிரசாரத்திற்காக நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்..

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment