இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல்.! 5,89,794 பேர் கைது.!

இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல்.! 5,89,794 பேர் கைது.!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு – தமிழக காவல்துறை 

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 6-வது இடத்திற்கு வந்துள்ளது. ஆனால் நாடுமுழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறியதாக 4,50,479 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 5,48,842 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 4276 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளிய சுற்றியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube