16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..!

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல ரவுடி கைது..!

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏரிமேடு  பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஜோஸ்வா என்ற ரவுடி கடந்த 18-ம் தேதி கடத்தி நான்கு நாள்களாக பலாத்காரம் செய்து உள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.  புகாரை அடிப்படையாக வைத்து கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜோஸ்வா புலியகுளம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்றனர்.போலீசார் வருவதை பார்த்த ரவுடி ஜோஸ்வா தப்பி ஓடு முயற்சி செய்தார்.அப்போது தவறிக் கீழே விழுந்தார்.இதனால் அவரது  கால் முறிந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையினர் போக்சோ பிரிவுவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரவுடி ஜோஸ்வா மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி  உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube