தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.
இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.மயங்க் அகர்வால் 10,புஜாரா 0 ,கோலி 12 ரன்களில் வெளியேறினார்கள்.இதனை தொடர்ந்து ரகானே மற்றும் ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது.
தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.இது இவருக்கு 6-வது சதம் ஆகும். ரோகித் சர்மா 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2000 ரன்களையும் எட்டியுள்ளார் ரோகித். தொடக்க ஆட்டக்காராக களமிறங்கி தனது 3வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.தற்போது வரை இந்திய அணி 45 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்துள்ளது.