தென்னாபிரிக்கா அணியுடன் ஆன போட்டியில் ரோஹித் கேப்டன்..!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய அணியுடன் 3 டி 20 , 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 தொடர் 1-1 என்ற கணக்கில் தொடர் டிராவில் முடிந்தது.

இதை தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளனர்.முதல் போட்டி வருகின்ற 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது.இந்நிலையில் இன்று முதல் மூன்று நாள்கள் பயிற்சி போட்டியில் ஈடுபட உள்ளனர்.

இந்த பயிற்சி போட்டிக்கு இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இப்போட்டி இன்று ஆந்திரா மாநிலம் விஜயநகரத்தில் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது.ஆனால் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் டாஸ் போட தாமதம்.

இந்திய அணி வீரர்கள்:

மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பஞ்சால், கருண் நாயர், சித்தேஷ் லாட், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ஜலாஜ் சக்சேனா, தர்மேந்திரசிங் ஜடேஜா, ஷார்துல் தாகூர், உமேஷ் யாதவ், அவேஷ் கான், இஷான் போரல் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

தென்னாபிரிக்கா அணி வீரர்கள்:

ஐடன் மார்க்ராம், டீன் எல்கர், தியூனிஸ் டி ப்ரூய்ன், டு பிளெசிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா, குயின்டன் டி கோக்(விக்கெட் கீப்பர்), வெர்னான் பிலாண்டர், கேசவ் மகாராஜ், லுங்கி என்ஜிடி, காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, டேன் பீட், ஹென்ரிச் கிளாசா , செனுரன் முத்துசாமி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

author avatar
murugan