1 ரன் எடுத்ததால் பட்டியலில் முதலிடத்தை தவற விட்ட ரோகித் சர்மா !

நேற்றைய போட்டியில்  இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் 50 ரன்கள் மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற இருந்தார்.ஆனால் நேற்று நடந்த போட்டியில் ரோகித் சர்மா இந்திய அணி தொடக்க வீரராக களம் இறங்கினார்.
இப்போட்டியில் ரோகித் சர்மா 10 பந்திற்கு 1 ரன்  மட்டுமே எடுத்து வெளியேறினார். இதற்கு முன் ரோகித் சர்மா கடைசியாக விளையாடிய ஐந்து ஒருநாள் போட்டிகளில் 50 ரன்னிற்கு மேல் எடுத்து இருந்தார்.
நேற்றைய போட்டியில் 1 ரன் எடுத்ததால் இந்த சாதனையை தவறவிட்டார்.ரோகித் சர்மா கடைசியாக விளையாடிய ஐந்து ஒருநாள் போட்டிகளில் 95, 56, 122*, 57, 140 ,1 ரன்கள் எடுத்து இருந்தார்.
 

author avatar
murugan