முதல் T-20யில் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் சர்மா

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைக்கவுள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவது T-20 போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் (Feroz Shah Kotla Ground)  நடைபெறுகிறது.
T-20  போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாளை நடைபெறும் போட்டியில் தொடக்க வீரரான ரோகித் சர்மா ஒரு சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.அதாவது நாளைய போட்டியில் 7 ரன்கள் அடித்தால் T-20  போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைப்பார். 90 சர்வதேச T-20  போட்டிகளில் விளையாடிவுள்ள  ரோகித் 2443 ரன்கள் அடித்துள்ளார்.ஆனால் விராட் கோலி 67 சர்வதேச T-20  போட்டிகளில் விளையாடி 2450 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.