பயிற்சியின் போது ரோஹித் ஷர்மா காயம்! தொடரில் பங்கேற்பாரா?!

பயிற்சியின் போது ரோஹித் ஷர்மா காயம்! தொடரில் பங்கேற்பாரா?!

நாளை முதல் வங்கதேச கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி  பல்வேறு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. நாளை முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சியில் இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், சிவன் திபு ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அவரது இடது தொடையில் அடிபட்டது. இதனால் இன்று நடைபெற்ற வலைப்பயிற்சியில் அவர் கலந்துகொள்ள வில்லை. இதனால், அவர் நாளைய போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்கப்போகிறாரா, இல்லை, இன்று ஓய்வு எடுத்துவிட்டு நாளை போட்டியில் கலந்துகொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்,

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube