டெஸ்ட் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த ரோகித்,அகர்வால்..!

டெஸ்ட் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த ரோகித்,அகர்வால்..!

இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி வருகிறது. இன்று மூன்றாம் நாள் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் 176 ரன்னும்  , மாயங்க் அகர்வால் 215 ரன்னும் அடித்தனர். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களின் அதிகபட்ச ரன்கள் பட்டியலில் ரோகித் , மாயங்க் அகர்வால்  இருவரும் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.
404 (வினூ மங்கட் 231 + பங்கஜ் ராய் 173) vs  நியூசிலாந்து, சென்னை, 1956
392 (சேவாக் 319 + வாசிம் ஜாஃபர் 73) vs தென்னாப்பிரிக்கா, சென்னை, 2008
391 (மாயங்க் அகர்வால் 215 + ரோஹித் சர்மா 176) vs தென்னாப்பிரிக்கா, விசாகப்பட்டினம், 2019

author avatar
murugan
Join our channel google news Youtube