ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகம் ! மீண்டும் புகார்

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு  இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அ.தி.மு.க. சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அப்போது, தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.இதையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.எனவே, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக அப்பொழுது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக சார்பில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திமுக எம்.பி.  டி.ஆர்.பாலு  கூறுகையில்,ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா புகார் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளோம் .ஏற்கனவே அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது மீண்டும் மனு அளித்துள்ளோம் என்று  டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார் .