இனி பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு ஆபத்து!

ரஜினிக்கு பிறகு திரையரங்குகளுக்கு நம்பி போவது இவர்கள் படத்திற்கு தான்.விஜய், அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர்.

இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே தமிழகத்தில் குறைந்தது 400 அல்லது 450 திரையரங்குகள் வரை ரிலிஸ் ஆகும்.

அந்த வகையில் சமீபத்தில் கூடிய தயாரிப்பாளர் சங்க மீட்டிங்கில் பெரிய விவாதமே இதுக்குறித்து வெடித்தது.

இதில் எல்லோரும் ஒரு மனதாக இனி ரஜினி, விஜய், அஜித் என யார் படம் வந்தாலும் 300 திரையரங்குகள் தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர்.

இதன் மூலம் இனி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைய கூட வாய்ப்பு உள்ளது, இந்த முடிவு நடைமுறையில் சாத்தியமா? பார்ப்போம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment