RIP என்பதற்கு அர்த்தமே இல்லை! குழந்தை சுஜித் குறித்து பிரபல நடிகரின் காட்டமான பதிவு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இந்நிலையில், 80 மணிநேர போராட்டத்திற்கு பின் குழந்தை சடலமாக மீட்கப்பட்டான்.
இதனையடுத்து, குழந்தையின் உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் சதிஷ் தனது இணைய பக்கத்தில், ஒரு காட்டமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அந்த மரண குழியை மூடாமல், அலட்சியமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படும் வரை, RIP என்பதற்கு அர்த்தமே இல்லை.’ என பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.