உடலுக்கு வலிமை சேர்க்கும் கேழ்வரகு ..,

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக்  கொள்ளலாம்.  ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்றவை ஏற்படாதவாறு தடுக்கும். உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறைவதோடு உடல் நல்ல வலிமை பெறுகின்றது.
கேழ்வரகு  நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க  உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் எடுத்துக்கொள்வது அவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.
கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க கேழ்வரகில் உள்ள  லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் உதவுகிறது.
பாலூட்டும் பெண்கள்கே ழ்வரகு சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும் ரத்தச்சோகை உள்ளவர்கள், மற்றும்  ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு கேழ்வரகு  அற்புதமான மருந்து. இது உடல்செரிமானத்திற்கு  உதவும்.
இயற்கையாகவே கேழ்வரகு உடலை ஓய்வு பெற செய்யும் தன்மை உடையது. மேலும்  தூக்கமின்மையை போக்க உதவுகிறது. ஒற்றை தலைவலிக்கு நிவாரணம் அளிக்கும் செயலையும் கேழ்வரகு செய்கின்றது.
கேழ்வரகில் அமினோ அமிலங்கள் இருப்பதால் உடலை இயல்பான செயல்பாட்டில் வைப்பதற்கும்  சேதமடைந்த திசுக்களை சரி செய்வதற்கும்  உதவுகிறது.
கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு  பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment