மீண்டும் அணிக்கு திரும்பும் தல!! பயிற்சியாளர் உறுதி

5-வது ஒருநாள் போட்டியில் விளையாட, தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்  என்று  இந்திய அணியின் துணை பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4 -வது ஒருநாள் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது.இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியது.

இதன் மூலம்  நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நாளை கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முடியும்.

இந்நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 5-வது ஒருநாள் போட்டியில் விளையாட, தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அதனால் 5-வது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவார் என்று  இந்திய அணியின் துணை பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment