ஆக்கிரமிப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழக சட்டப்பேரவை நேற்று நடைபெற்றது.பேரவையில் வருவாய்த்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

அப்பொழுது அவர் பேசுகையில், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு, அவர்களின் வருமான உச்சவரம்பை அறிந்து, தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும் .மேலும்  கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று வருவாய்த்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.