பயனாளியின் விவரம் சரிபார்க்க..!! இனி ஆதார் கட்டாயம்..!!

நிதி மோசடிகளை தடுக்கும் வகையில், வங்கி மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளில், ரிசர்வ் வங்கி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு, இனி ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படும். நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு ஏதுவாக, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், நீதிமன்ற உத்தரவுக்கேற்ப இது மாறுதலுக்கு உட்பட்டது என்று கூறியுள்ளது. இது, எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment